Thursday 25 February 2016

இறுதி சுற்று - விமர்சனம்

ஹாலிவுட் டில் குத்து சண்டையை மைய படுத்தி நிறைய படங்கள் இருந்தாலும் , பெண்கள் குத்துசண்டை யை மையபடுத்தி வந்த மில்லியன் டாலர் பேபி ஒரு அற்புதமான படம் ..தமிழில் அந்த வகையில் ஒரு படம் இல்லையே என்ற குறை இனிமேல் இருக்காது ..இந்திய அளவில் மேரி கோம் திரைபடம் பாக்சிங் ஐ பற்றி இருந்தாலும் அதில் பாக்சிங் செலக்ஷன் ல் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் , மற்றும் பெண்கள் வாய்ப்புக்காக சகித்து கொள்ள வேண்டிய வரம்பு மீறல்கள் , இணங்க மறுப்பவர்களின் வாய்ப்புகள் தகுதி இருந்தாலும் மறுக்க படுவது ..போன்ற நடப்பு விஷயங்கள் இல்லை ..ஆனால் இவை அத்தனையும் பொளேர் என்று அறைந்தார் போல் வைத்து அதனுடன் மிக அற்புதமாக ஒரு மெல்லிய காதலுடன் இணைத்து வந்திருக்கும் படம் ... இறுதி சுற்று...
சுதா பிரசாத்
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து , துரோகி படம் மூலம் தமிழில் அறிமுகம் ..
ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு படமா.வாவ் .படம் முழுக்க பெண்ணியம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ...ஆனால் படம் முழுவதும் சிறு சிறு காட்சிகளில் நம் மனதுக்குள் ஆயிரம் விஷயங்களை சொல்லி செல்கிறார் .மதி ஜெயித்தவுடன் பர்தாவை விலக்கும் பெண்கள்.காட்சி ஒரு உதாரணம்.படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் ..அது ஒரு வார்த்தையாக இருந்தாலும் சரி ..பெரி
ய டயலாக் காக இருந்தாலும் சரி ..பொறி பறக்கிறது
மாதவன் - தமிழில் வேட்டை கு பிறகு ஒரு ஸ்ட்ராங் கம் பேக் .. உண்மையில் இதுதான் உண்மையான வேட்டை.. கோபமாக ..மூர்க்கமாக ,,தன்னை பற்றிய விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் , அதே சமயம் அளவு மீறும் போது உறுமி தீர்க்கிறார்..கடைசியாக மதி ஜெயித்தவுடன் ஒரு நிமிடம் கண் கலங்குவது ஆகட்டும்..மாதவனுக்கு மூன்று வருட தவம், இந்த இறுதி சுற்று ...
ரித்திகா சிங்..ம்ம்மா .. இன்னா பொண்ணும நீ .. ..செம பேஜாரா நடிசிகிற அதிலும் ,,மீனு கூவி விகறது ஆவட்டும் ,அப்பால கோச் அடிச்சா வுடனே சிறுத்த மாறி சீறது ஆவட்டும்,,சும்மா கோச் ச கல்லாய்க சொல்ல ..செம மா ..பின்னிட்ட..கட்சில பாக்க சொல்ல அல்லு இல்லை..மாஸ் காட்டிட்ட மதி....
படம் ஆரம்பித்தது முதல் ..கடைசி நிமிடம் வரை பார்வையாளனை தன் வசபடுத்துகிறது ...சந்தோஷ் நாராயண் ன் இசை .. வா மச்சானே பாட்டு செம லைவ்லி ...
எங்கய்ய நம்மாளுக ஜெயிகிறாங்க .. இவங்க எங்க போனாலும் தோகிறது தான் வேலை .. மத்த நாட்டை பாருங்க ..என்னமா ட்ரைன் பண்றானுக ...எப்படி மெடலை குவிகிராணுக என்று எனக்கு இருக்கும் குருவி மூளை யை போல் வைத்து புலம்பி கொண்டு இருக்கும் என்னை போன்றோருக்கு
ஒரு வீரர் அல்லது வீராங்கனை ஜெயிபதற்கு பின்னால் இருக்கும் அதனை வலிகளையும்,அவமானங்களையும். தான் வென்றவுடன் கண்ணீர் மல்க தன் வெற்றியை கொண்டாடும் யாரும் ..உண்மையில் அந்த வெற்றிக்காகவும்,கோப்பைக்காகவும் அழுவதில்லை, தான் கடந்து வந்த அவமானங்களை, வலிகளை, நிராகரிப்புகளை கண்ணீரால் கரைத்தே அந்த அங்கிகாரத்தை பெறுகிறார்கள் என்பதை பார்ப்பவன் நெஞ்சில் அடித்து சொல்கிறது இந்த இறுதி சுற்று .
எவன்ய இனிமே சொல்றது இந்தியாவில் டேலேன்ட் இல்லை னு.. என்ன அது ஏழைங்க கிட்ட இருக்கு.. எப்ப அது வெளி வருதோ ..அப்பால ஒலிம்பிக் ல நாமதன்யா டாப்

-
ஹரி 

No comments:

Post a Comment