Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, 9 January 2015

பிசாசு - விமர்சனம்

திரைப்படங்களை பொறுத்தவரை சிலருடைய படைப்புகள் மனதில் நீங்காத ஒரு மென் சோக வலியை உருவாக்கும், அதன் பாதிப்புகள் மூன்று நான்கு நாட்களுக்கு இருக்கும் ,அவை அனைத்தும் முதல் முறை ஓகே , இரண்டாவது முறை ஏற்று கொள்ளலாம் , தொடர்ச்சியான அதே முயற்சிகள் படு தோல்வியை தழுவும்.. உதாரணம் .. பாலா..தனது முதல் படமான சேது வில் ரசிகர்களை கட்டி போட்டு முதல் முறையாக மர்பிட் பீல் என்ன என்பதை உணர வைத்தார் .. அனால் தொடர்ச்சியாக இதே மோர்பிட் பீளை இவர் படங்களான நந்தா, பிதாமகன் , அவன் இவன் என ரசிகர்களுக்கு தர.. எவனோ ஒருவன் க்ளிமக்ஸ் இல் சாவபோகிறான் என்பது பேர் போடும் போதே நமக்கு திட்டவட்டமாக தெரியும் , அது மூக்குபொடி போட்டா ( நந்தா ) இல்லை சாக்கு மூட்டைல கட்டிய (பிதாமகன்) இல்ல மரத்தில தொங்க விட்டா ( அவன் இவன் ) என்பது தான் டைரக்டர் ட்விஸ்ட் .

.படம் பாத்துட்டு வெளியே வந்ததும் எவன் கழுத்தை கடிச்சு கொதறலாம் நு இருக்கும்..வீட்டுல எளவு விழுந்த மாதிரி  ஒரு நாலைஞ்சு நாள் தூக்கமே வராம மூஞ்ச தூக்கி வைச்சு திரிவோம்..அனா யாரு கேட்டாலும் ..சான்சே இல்ல மச்சி .. உலக சினிமா .. உலக டைரக்டர் நு உளறி வைப்போம் ....அனால் இந்தவொரு காட்சியைடும் வலிந்து திணித்து , வேண்டுமென்றே கதையில் ரத்தம் புகுத்தி , கதாபாத்திரங்களை அடித்து கொன்று ரசிகர்களை அழ வைத்தால் அது உலக சினிமா இல்ல.. காட்சிகள் நகர , நகர , சம்பவங்களின்  பாதிப்பை சரியான நடிப்பு மூலம், மனதை உருக்கும் வசனங்கள் மற்றும் சரியான உச்சரிப்பு மூலம், வலிந்து திணிக்கும் சோகம் இல்லாமல் , ஒரு படமோ , அல்லது ஒரு காட்சியோ  மொத்த பார்வையாளர்களின் சப்த நாடியையும் ஒடுக்கி , மூச்சு சத்தத்தை தவிர எந்த சத்தமும் கேட்காத ஒரு அமைதியை உருவாக்கினால்..பக்கத்துக்கு சீட்டு விகர் பார்க்கும் என தெரிந்தும் கண்ணில் கர கர வென்று கண்ணிர் வர வைத்தால்..அது தான் உலக சினிமா ..

அந்த காட்சியோ , இல்லை படமோ முடிந்து சரியாக , மிக சரியாக  ஆறு  நொடிகள் கழித்து..அதிர்ச்சியில் இருந்து மீண்டு பார்வையாளர் மொத்த பேரின் கை தட்டலில் வான் பிளந்தால் .... அதாண்ட படம் ... அவன் தாண்ட டைரக்டர்..ஏன்..ஒரு டைரக்டர்கும் , நடித்தவற்கும் ரசிகன் தரும் மிக உயர்ந்த அளவிட முடியாத கவுரவம் , விருது , பரிசு எதுவெனில் ..அவன் கண்ணிருடன் கலந்த கை தட்டல் தான்...அந்த மாதிரி ஒரு காட்சி பிசாசு படத்தில் உள்ளது ... ( ஒரு காட்சி மட்டுமே , மொத்த படமும் அல்ல )..மிஸ்கின் உலக சினிமா முயற்சியை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்..சபாஷ் , வாழ்த்துகள் ..

ஆனா மிஸ்கின் அங்கிள் ட சில டௌப்ட்ச் கேட்கலாம்னு ...தப்பா இருந்தா மன்னிச்சுருங்க..கோபப்பட்டு கழுத்த கடிசிராதீங்க .. என்னா பிசாசு படம் தயாரிப்பு பாலா அங்கிள் ..ஆமா ..

1. ஏன் உங்க எல்லா படத்திலும் , ரொம்பபபப நீளமா காட்சிகள் இருக்கு.. அதும் சாதாரண குளிகறது, துணி மாத்தறது இதுக்கெல்லாம் எதுக்கு இவ்ளோ பெரிய லாங் சோட்ஸ.

2.எதுகுனே புரியாம ஏன் எல்லாரும் தலைய தொங்க போடுகறாங்க.
.
3.ஆர்டிஸ்ட் கால்சீட் வாங்கிட்டு ஏன் அவன் மூஞ்ச காட்டாம , காலை மட்டும் காட்றீங்க.
4. சண்டைல ஏன் ஒவ்வொருத்தனா வந்து அடி வாங்குறாங்க..
5. ஏன் அல்லாரும் ரொம்ப லேட்டா ரியாக்ட் பண்றாங்க (நிமிர்வது , குனிவது , திரும்புவது, ஓடறது )
6. இந்த படத்தில ஹீரோ ஏன் பிசாசை விட அதிகமா முடி வச்சிருக்கார்..கடைசி வரை அவர் முடி தெரிஞ்சதே தவிர ..மூஞ்சி தெரியவே இல்ல ..
7. படம் முழுக்க ..படத்துக்கு தேவை இல்லாத, சம்பந்தமே இல்லாத குறியீடுகள் படம் முழுவதும் இருக்குது.. (தண்ணி குடம் ஒழுகுவது, அட்டை பூச்சி ஊர்வது , ஆயா முறைச்சு முறைச்சு பார்ப்பது )
இதை தயவு செய்து களாய்பதாக நினைக்க வேண்டாம் .. ஒரு நல்ல படத்தில் , இந்த கிலிசே காட்சிகள் அதன் தரத்தை பார்வையாளனை உணர வைபதில்லை .. மாறாக எரிச்சல் படுத்துகின்றன .. இவர் படம் இப்படி தான்ய..ஒன்னும் புரியாது ..ஆனா நல்லாருக்கும் என சொல்ல வைக்கின்றன. அந்த ஆதங்கத்தில் தான் இத்தனை கேள்வி ..சரி ..விமர்சனத்துக்கு வருவோம் .. சில படங்களுக்காக நாம் நம்மை தயார் செய்து கொள்வோம் .. அப்படி நான் என்னை என்ன ஆனாலும் சரி ..பயபடாதே என தயார் செய்து கொண்டு சென்ற படம் ..பிசாசு ... ஆனால் படம் முடிந்து வெளி வருகையில் என் கண்ணில் இருந்த நீர் துளிகளே படத்தின் வெற்றி ..
ஒரு பெண் வாகன விபத்தில் அடி படுகிறாள்.. அவளை காப்பாற்ற போராடும் ஹீரோ ..முயற்சி பலனளிக்காமல் அவள் இறக்க, அவள் நினைவாக இருந்த ஒற்றை செருப்பை அவன் வீட்டுக்கு கொண்டு வர ....வந்தது வினை ...அவன் வீட்டில் பேயாக அவள் வாழ்கிறாள்..இது அனைத்தும் நடப்பது படத்தின் முதல் 15 நிமிடங்களில்..அடுத்து நாம் பேய் என்னவோ செய்ய போகிறது என நினைத்தால் ...பீலிங் ஹீரோ ..பிச்சைகாரர்கள் , பீர் பாட்டில் என திசை மாறுகிறது ..அடுத்து வருபவை எல்லலாமே வள..வள ..கொழ, கொழ தான்.. போச்சு ..நம்ம கொடுத்த காசு போச்சு ..என நினைக்கும் போது தான் ..அந்த பெண்ணின் தந்தையாக ராதாரவி அறிமுகம்..தன மகள் தான் பேய் என தெரிந்து உருகி , அழுது, பின்னால் பொய் கொஞ்சும் அந்த அப்பன் பாசம் ..பின்னீடீங்க சார்.. கிரேட்..இந்த காட்சி தான் நான் மேலே சொன்ன கை தட்டல் காட்சி ... அட்டகாசம்..அதற்கு பின் மிஸ்கின் வழக்கமான Tough ட்விஸ்ட் with சிம்பிள் நாட்..அப்புறம் கிளைமாக்ஸ்..அப்புறம் ஆடியன்ஸ் கை தட்டல் என படம் முடிகிறது..
பிசாசு வரும் கட்சிகளில் கிராபிக்ஸ் அண்ட் மகிங் அருமை .கொரிய மற்றும் ஹாலிவுட் படங்கலகு நிகரான மேக் அப் பிசாசின் நகர்வுகளில் கேமரா டிராவல் புது முயற்சி .....பயந்து தூக்கத்தை கெடுக்கும் பேய் படங்கள் ஒருவகை.. சிரிக்க வைக்கும் பேய் படங்கள் மற்றொரு வகை... அனால் பயத்தையும் , பாசத்தையும் , காதலையும் கலந்து கட்டி ஆடிய இந்த பிசாசு புது வகை ...கண்டிப்பா பாருங்க .. நல்லாருக்கும்..


Saturday, 13 September 2014

The Truman Show


1998 ல விஜய் யோட நினைத்தேன் வந்தாய் படம் பார்த்துட்டு , அதே மாதிரி ஒரு கண்ணாடி போட்டுட்டு போய் 8 ம் வகுப்பு பரீட்சை எழுதி பெயிலானது , ஷங்கர் யோட ஜீன்ஸ் படம் பார்க்க தியேட்டர் கு ஜீன்ஸ் போட்டு போய் அவருக்கு பெருமை சேர்கிறது நு அனுபவிச்சு வாழ்ந்த காலம் அது..

அப்பதான் இந்த படம் ரிலீஸ் ஆகி உலக கதாசிரியர்கள்
வாயிலே எல்லாம் ஆவி வர வெச்சது .. அவ்வளவு ப்ரில்லியன்ட் ஸ்க்ரீன் ப்ளே அண்ட் செம கதை இருக்கிற படம் . Fantasy,Fictional,Current Events, Day to day life, Comedy இதெல்லீம் வேற வேற Genre .. ஆனா இதை எல்லாம் ஒரே கலக்கு கலக்கி ,மொத்தமா போட்ட ஒரு முட்டை அம்லேட் தான்  THE TRUMAN SHOW..


இந்த வாழ்க்கை ஒரு நாடகம் , உலகம் ஒரு மேடை , அதில் நாம் எல்லாரும் நடிகர்கள் எத்தனயோ தடவை நாம மொக்கை போற்றுப்போம் , ஆனா அதாங்க இங்க கான்செப்ட்,
நம்ம பாட்டுக்கு, பிரண்ட்ஸ் , கேர்ல் பிரண்ட்,சரக்கு,சைட் டிஷ்,  பேஸ்புக் , மூவி , வேலை அப்புறம் கல்யாணம் , குழைந்தங்க, மளிகை சாமான் , DUE ல கார் னு அப்டியே வாழ்க்கை la தேமே னு போயிடுருப்போம் .. அப்ப திடுர்னு ஒரு நாள் . இதெல்லாமே பொய், நம்ம சுத்தி இருக்கிற எல்லாருமே நடிகர்கள் , அந்த ஊரே ஒரு செட்,  நம்ம WIFE, LIFE எல்லாமே ஒரு ஏமாத்து  வேலை னு தெரிய வந்தா எப்டி இருக்கும் , அப்டியே பிரேம்ஜி ய பெருமாள் வேசத்துல பாத்த மாதிரி மயக்கம் வராது ??


அதாங்க இந்த படத்தோட ஒன் லைன் ஸ்டோரி .. சாரி ..5 லைன் ஸ்டோரி

ஜிம் காரி தான் இந்த படத்தோட ஹீரோ , முதல இந்த ரோல் ராபின் வில்லியம்ஸ் பண்ற மாதிரி தான் இருந்தது .. கடைசியா ஜிம் காரி கே கிடைச்சது.. அவர்தான் படத்துல TRUMAN.. அவர் பாட்டுக்கு  அமைதியா அவரு ஆபிஸ் , காரு , அவரு லவ் , நண்பர்கள்  னு  சும்மா திவ்யமா வாழ்ந்துட்டு இருக்கார்..ஒரு நாள் பீச்சுல உட்காந்து பினாதிட்டு இருக்கும் போது, திடுர்னு அவர் தலைக்கு மேல மட்டும் மழை பேயுது.. என்னடா  னு  அவர் ஆச்சர்யமாக அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் அவர்க்கு அவரோட வாழ்கை அவரோடது இல்ல னுதெரிய வைக்குது ..

உலகம் பூரா வெற்றிகரமா , வெற்றிகரமா நா , அப்படி ஒரு வெற்றி கரமா ஒளிபரபாகிற ரியாலிட்டி ஷோ தான் TRUMAN ஷோ .. இந்த ஷோ 24 மணி நேரமும் ஒரு மனிதனோட வாழ்கை யை , அவனுக்கு தெரியாம ஒளிபரப்பும்..இதை வெறி தனமா விடாம பார்கிறவங்க தான் நம்ம ரசிகர்கள் ....   இந்த ஷோ வோட கிரியேட்டர் Ed Harris , இதுக்குனே ஒரு குழந்தைய தத்து எடுத்து , ஒரு ஊரையே செட் போட்டு , எல்லா இடத்திலையும் கேமரா வச்சு , இரவு , பகல் , கடல் , வானம் , காத்து , நேரம் என எல்லாத்தியும் செயற்கையா உருவாக்கி , அம்மா , அப்பா , அவன் சைட்டு , அவளோட பைட்டு , ஊர் மக்கள், நண்பன் என எல்லாத்தியும் நடிக்க வைக்கிற ஒரு பயங்கரமான அறிவாளி ... இவரோட மொத்த TECHNICAL UNIT ம் இருக்கிறது எங்க தெரிமா , அந்த ஊரோட நிலா ல ...ஆமா நிலாவும் செட் தான்...


TRUMAN ஷோ ரசிகர்கள் என்ன எதிர்பார்கிரர்களோ , அதே மாதிரி JIM CARREY யை  அழ வைப்பது , சிரிக்க வைப்பது , கோப பட , பயப்பட வைப்பது  னு   எல்லாமே இவர் சொல்படி நடக்கும் நிகழ்வுகள் தான் ...

TRUMAN அப்பாவை சிறு வயதில் கடலில் இறக்க வைப்பது (அந்த மாதிரி நடிக்க வைப்பது ), இதனால் கடலை கண்டாலே பயம் கொள்ள வைப்பது, மொத்த ஊரையும் PERFECT ஆகா நடிக்க வைப்பது , நிலா செட்டில் உட்கார்ந்து கொண்டு மொத்த உலகத்திற்கும் இதை ஒளிபரப்புவது , கடைசியில் உண்மை தெரிந்து  TRUMAN தப்பிக்கும் முயற்சிகள் எல்லாவற்றையும் தடை செய்வது , கடைசியாக கடல் வழியாக தப்ப முயற்சி செய்யும் போது , புயல் , மழை , பேரலை கலை TECHINICAL  ஆக உருவாக்குவது என இந்த சோவின்  கிரியேட்டர்   ஆக  பின்னுகிறார்  Ed Harris ..

தன் கண்ணீரை கூட க்ளோஸ் அப் இல் பதிவு செய்யும் காமிராக்கள், 24 மணி நேரமும் தன்னை கவனிக்கும் ரசிகர்கள் , தன்னை சுற்றி இருப்பவர் எவர்க்கும் தெரியாமல் தப்பிக்க போடும் பிளான் கள் ,கடைசியில் எல்லோரையும் கண் கலங்க வைத்து விடை பெறுவது என TRUMAN ஆக ஜிம் கேரி யின் நடிப்பு .வாவ் ..ஜிம் காரி கு இந்த படம் மிக பெரிய வெற்றி யையும் , விருதுகளையும்  அள்ளி கொடுத்தது ..

 நினைத்து பார்க்க சாத்தியமில்லாத இந்த கதையை , பிரம்மாண்டமான செட்கள் மற்றும் வேகமான திரைக்கதை மூலம் நம்மை நம்ப வைத்து நம்மை வாய் பிளக்க வைகிறார்கள்... ...

Movie Name : The Truman Show.
IMDB Rating : 8/10.
Genre : Satirical social science fiction comedy-drama.

கொஞ்சம் இப்படி நினைத்து பாருங்கள்... இது நம் கதை தான்.. அந்த Ed Harris Character தான் கடவுள் . அவர் நடத்தும் நிகழ்வுகள் தான் நம் இன்பம் , துன்பம் வாழ்க்கை எல்லாம் .....அப்ப அந்த  TRUMAN யாருனு கேட்கீரீங்களா ..... வேற யாரு பாஸ் ..நானும் ...நீங்களும் தான்....

ப்ப்ப்ப்ப்பாஆஆஆஅ , செம மொக்கை அப்டின்னு பீல் ஆவாதீங்க..




Monday, 1 September 2014

Drishyam - Movie Review - The Best Crime Thriller of Malayalam.


என்னடா இவன் எடுத்த எடுப்பிலே மலையாள படத்துக்கு விமர்சனம் எழுதுறான்.... இவன் ஒரு வேலை பாலக்காட்டு மாதவன் நாயரோ நு , இல்லை ஆட்டோகிராப் சேரன் போல அடிவாங்கியவனோ ...என சேட்டாகளும் , சேச்சிகளும் என்னை தவறாக  நினைக்க வேண்டாம் .. மலையாளத்தை பொறுத்தவரை அடியேன் ....பூஜ்யம் என்ற நிலைக்கும் கீழே ...  மலையாளத்தில் இது வரை பார்த்த படங்கள் என எதுவும் இல்லை.... ( சாமி சத்தியமா நான் நல்ல பையன் )

அது ஏன் என்று தெரியவில்லை ... மே பி ..... கதை எப்போதுமே ஒரு வீடுகுல்லியே நடப்பதலோ ,இல்லை ஹீரோ எபோதும் கலர் கலர் லுங்கி கட்டி , கள்ளு கடையே கதி என கிடபதாலோ  ,  இல்லை லால் எட்டா வாகட்டும் , மமூட்டி எட்டா வாகட்டும்  ஒன்னா லாரி டிரைவர் ஆகவோ , இல்லை கண்ணாடி போட்ட கமிசனர் ஆகவோ, இல்லை தாதா வாகவோ , இல்லை வீட்டின் அண்ணனாகவோ ....ஒரு கெட் அப்  கூட இல்லாமல் சட்டையும் , லுங்கியும் , கண்ணாடியும் மட்டுமே மாற்றி மாற்றி  போட்டு நடித்ததாலோ என்னவோ மலையாள திரைப்படங்கள் பார்க்கும் எண்ணம் இது வரை துளிர்க்கவே இல்லை ...... ஆனால் ..மேலே சொன்ன இந்த Template களையும் மலையாள திரைப்படங்கள் மீதான என் தவறான எண்ணத்தையும் , " போடேல்" என்று பின் மண்டையில் அடித்து கலைத்தது  இந்த படம் .......ஆம் , அதுவும் இங்கிலீஷ் Subtitles  பார்த்தே ......
அதற்கு பிராயசித்தமாகத்தான் இந்த படத்திற்கு முதல் விமர்சனம் எழுதிகிறேன் ..

திரிஷ்யம் என்றால் காட்சி (Visual)என்று பொருள் ... "தம்பி திரைப்படம் னாலே காட்சி தான் பா னு கடுப்பாகீதர்கள் "  இந்த தலைப்பின் அர்த்தத்தை இந்த படம் பார்க்கும்போது உணர்வீர்கள் ..

சரி த்ரில்லர் என்ற வகையறாவில் மொத்தமே மொத்தம் நான்கு சப் Genre கள் தான். 1. Psychological . 2 . Crime . 3 . Mystery 4. Erotic  த்ரில்லர் என  நான்கு வகையறாக்கள் இருந்தாலும் , திரைப்படமாக உருவாகும் போது சில திரை  விதி களை வைத்தே திரை படங்கள் உருவாகின்றன . அதுவும் ஒவ்வொரு நாடுகளில் , ஒவ்வொரு மொழிகளில் இந்த த்ரில்லர் படங்கள் உருவாகும் போது மக்கள் மற்றும் கலாசார விசயங்களை , முக்கியமாக நம்பிக்கைகளை கருத்தில் கொண்டே உருவாக்க படும்..

பெரும்பாலான திரைப்படங்கள் நாவல்களில் இருந்தே  உருவாக்கப்பட்டவை .... அது 1915 ல் வெளிவந்த John Buchan ன் தி 39 ஸ்டெப்ஸ் நாவலில் தொடங்கி , 1959 - ல் சைக்கோ ல் பயமுறுத்தி , 2013 ல் வந்த Enemy படம் வரை .. அதனையும் நாவல்களின் பின் புலத்திலேயே உருவானவை ...

முதல் இரண்டு நாவல்களும் , 1935, 1960 ல் த்ரில்லர் களின் முடி சூடா திரைகதை மன்னன் Alfred Hitchcock திரைப்படமாக எடுக்கப்பட்டு உலகையே அலற வைத்தவை , இந்த திரைப்படங்களின் அதிரடியான வெற்றி காரணமாக தி 39 ஸ்டெப்ஸ் மற்றும் சைக்கோ படங்கள் , தொடர் பாகங்களாக வந்து கல்லா கட்டின .. எது எப்படியோ  Alfred Hitchcock பேரை டைடிலில் பார்த்தாலே மக்கள் அலற ஆரம்பித்தினர்..அதிலும் சில காட்சிகளுக்கு மக்கள் அலறி அடித்து முன் சீட்டை உதைத்து தள்ளிய காட்சிகளும் உண்டு ...
                                         Infamous shower scene from Alfred Hitchcock's Psycho movie (1960)- 
    The Shining (1980) - famous sequence where Jack sticks his face through the broken door and says, "Here's Johnny!
ஏன் இந்த விசயங்களை எழுதினேன் என்றால் , தமிழில் வெகு சில படங்களே  த்ரில்லர்  சப்ஜெக்ட்  எ சரியாக கையாண்டவை..சப்ஜெக்ட் என்றால் Template அல்ல... ஒரு பங்களா, அங்கே கொடூரமா ஒரு வாட்ச்மேன்.  நைட் சீன் , அங்க ஒரு பேய் ... இல்லேன்னா ஒரு கொலை , நல்ல ஹீரோ அதுல மாட்டிகிறான், எப்டி தப்பிக்கிறான் இல்லை கண்டுபிடிக்கிறான்..இல்லேன்னா டூர் போற நாலு பேரு , OLX ல கோட இல்லாத ஒரு காட்டு வீட்டுக்கு போய் பேய் கிட்டயோ இல்ல சைக்கோ கொலை கரன்கிட்டயோ மாத்து வாங்கி சாகறது , இதெல்லாம்  Template  ..இதுல ஒரு 30000 படம் வந்திருக்கும் ,, சில படங்கள் இந்த  Template  இன் அரம்பமாகவோ , இல்லை வித்யாசமாக எடுக்கப்பட்ட படங்கள்ஆகவோ இருக்கும் , அதே கண்கள் , சிகப்பு ரோஜாக்கள் , நூறாவது நாள் , ஊமை விழிகள் , யுத்தம் செய் ,கடைசியாய் வந்த  பிட்சா வரை இந்த  Template   கொஞ்சம் மாற்றி வெற்றி பெற்ற படங்கள் .. ... ( தமிழ் நாட்டை பொறுத்தவரை மட்டும் )
இந்த த்ரில்லர் சுப்ஜெக்ட் இ கையாள ஒரு நல்ல திறமை அவசியம் , மினிமம் பைசா வசூலிற்காக ஆங்கில படங்களை அட்ட காபி அடித்தோ , இல்லை மேல கூறிய டேம்ப்லடே படம் எடுத்து , மூணாவது நாள் டிவிடி யிலோ , இல்லை 30 வது நாள் கே டிவி யிலோ வரும் படங்கள் தான் அதிகம் ..ஆதலாலேயே இந்த சப்ஜெக்ட்  தொட மசாலா இயக்குனர்கள் விரும்பவதில்லை ...  ஆனால் இந்த படத்தின் டைரக்டர் இதை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.. லால் எட்டா வின் கால் சீட்டும் , கொஞ்சம் பணமும்  , சில Character களை மட்டும் வைத்து கொண்டு  அட்டகாசமாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்து இருக்கிறார்.

பாசமான , வாழ்கையை எளிமையாக அதே சமயம் மிக அழகாக வாழுகின்ற ஒரு  குடும்பம் .. நான்காவது வரை மட்டும் படித்து , கேபிள் டிவி பிசினெஸ் செய்து ,வரும் வருமானத்தில் வாழ்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் தன மனைவியுடனும் தன இரு பெண் குழந்தைகளடுனும் ரசித்து வாழும் பாச தந்தை யாக மோகன் லால் ..

அழகான குடும்பத்தை புயலாய் கலைக்கின்றது ஒரு கொலை ..பயந்து பரிதவிக்கும் தன் குடும்பத்தையும் , அடித்து துவைக்கும் போலிசையும் சாதுர்யகமாக சமாளித்து தன் குடும்பத்தை தண்டனையில் இருந்து  காப்பாற்றும் ஒரு சாதாரண மனிதனை பற்றியே கதை இது 

.காலையில் எழுந்தவுடன் எரியும் விளக்குகளை அனைபதாகட்டும் , இரவு கேபிள் படம் பார்த்து விட்டு சைக்கிளில் அவசரமாக வீடு வந்து சேர்வதகட்டும்,  எல்லா பிரச்சனைகளக்கும் திரைபடங்கள் பார்த்து தீர்வு சொல்வதாகட்டும் என மிடில் கிளாஸ் ஜார்ஜ் குட்டி யாக வாழ்ந்து இருக்கிறார் மோகன் லால் , மனைவியாக நம்ம மீனா ,  சரியான நேரத்தில் மாருதி  கார் கேட்பதிலாகட்டும் , தன் பெண் வீடியோ வை பார்த்து கதறி , Delete செய்ய  சொல்லி கெஞ்சுவதிலகட்டும் ... க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

இந்த படத்தின் மிக முக்கிய Character , IG  கீதா பிரபாகர்...மிடுக்கான போலீஸ் பாத்திரம் , அழகான ஆங்கில உச்சரிப்பு , மகனை காணவில்லை என கவலை படுவதும், மோகன் லாலின் குடும்பத்தை சந்தேக கண்களாலேயே எரிப்பதும் ,அடுத்த அடுத்த விசாரணையை அதிரடியாக நடத்துவதும், மகன் கெட்டவன் என்று தெரிந்தும் எல்லர்முனும் காட்டி கொள்ளாமல் விசாரணையை தொடர்வதும் ,  மகனை புதைத்த இடத்தை தோண்டும் போது தான் IG என்பதை மீறி , ஒரு தாயாக கதறி அழுவதாகட்டும்...  Hats off to Asha Sharath . . ( தெலுங்கு மற்றும் தமிழ் Remake லும்  Yester Year நதியா than  IG  கீதா பிரபாகர்...)
இந்த படமும்  அமைதியாக , பிள்ளைகளை பற்றிய எதிர்கால கனவுகளோடு  வாழும் ஒரு சாதாரண Common Man பற்றிய படமே .. ... கொலை நடந்த அடுத்த நாள் மோகன் லால் செய்யும் காரியங்கள் ,சாட்சியங்களை அவர்களுக்கு தெரியாமலே அவர்களை பொய் சொல்ல வைப்பது ,  விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக வெளிவரும் உண்மை , கடைசியில் புதைத்த பிணம் எங்கே என கண்பிபது வரை ...திரைக்கதை பர பறக்கின்றது....

இந்த படத்தின் டைரக்டர் Jeethu Joseph கு இது ஐந்தாவது படம் ... முதலில் மம்மூட்டி யை இந்த படத்திற்காக அணுகி , கால் சீட்  கிடைக்காமல் மோகன் லால் இ வைத்து எடுத்து இருக்கிறார் .. இதுவரை வெளி வந்த அத்தனை மலையாள சினிமா சாதனைகளையும் முறியடித்து , வசூலில் சாதனை புரிந்தது இந்த படம் ...
நான்காவது வரை மட்டுமே படித்தவனது அறிவை அலட்சியமாக எண்ணி, உண்மை தெரிய , அவனிடமே கை கூப்பி கெஞ்ச வைக்கும் அற்புதமான Crime Thriller .வழக்கம் போல தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்கிறார்கள் ... தமிழில் யார் தெரியுமா .... நம்ம கமல் அண்ட் கௌதமி தான் ......படத்தின் பெயர் பாபநாசம்.....

Verdict  :  Good thriller Worth your time and your family as well......

Rating : 7 / 10.