Friday 9 January 2015

பிசாசு - விமர்சனம்

திரைப்படங்களை பொறுத்தவரை சிலருடைய படைப்புகள் மனதில் நீங்காத ஒரு மென் சோக வலியை உருவாக்கும், அதன் பாதிப்புகள் மூன்று நான்கு நாட்களுக்கு இருக்கும் ,அவை அனைத்தும் முதல் முறை ஓகே , இரண்டாவது முறை ஏற்று கொள்ளலாம் , தொடர்ச்சியான அதே முயற்சிகள் படு தோல்வியை தழுவும்.. உதாரணம் .. பாலா..தனது முதல் படமான சேது வில் ரசிகர்களை கட்டி போட்டு முதல் முறையாக மர்பிட் பீல் என்ன என்பதை உணர வைத்தார் .. அனால் தொடர்ச்சியாக இதே மோர்பிட் பீளை இவர் படங்களான நந்தா, பிதாமகன் , அவன் இவன் என ரசிகர்களுக்கு தர.. எவனோ ஒருவன் க்ளிமக்ஸ் இல் சாவபோகிறான் என்பது பேர் போடும் போதே நமக்கு திட்டவட்டமாக தெரியும் , அது மூக்குபொடி போட்டா ( நந்தா ) இல்லை சாக்கு மூட்டைல கட்டிய (பிதாமகன்) இல்ல மரத்தில தொங்க விட்டா ( அவன் இவன் ) என்பது தான் டைரக்டர் ட்விஸ்ட் .

.படம் பாத்துட்டு வெளியே வந்ததும் எவன் கழுத்தை கடிச்சு கொதறலாம் நு இருக்கும்..வீட்டுல எளவு விழுந்த மாதிரி  ஒரு நாலைஞ்சு நாள் தூக்கமே வராம மூஞ்ச தூக்கி வைச்சு திரிவோம்..அனா யாரு கேட்டாலும் ..சான்சே இல்ல மச்சி .. உலக சினிமா .. உலக டைரக்டர் நு உளறி வைப்போம் ....அனால் இந்தவொரு காட்சியைடும் வலிந்து திணித்து , வேண்டுமென்றே கதையில் ரத்தம் புகுத்தி , கதாபாத்திரங்களை அடித்து கொன்று ரசிகர்களை அழ வைத்தால் அது உலக சினிமா இல்ல.. காட்சிகள் நகர , நகர , சம்பவங்களின்  பாதிப்பை சரியான நடிப்பு மூலம், மனதை உருக்கும் வசனங்கள் மற்றும் சரியான உச்சரிப்பு மூலம், வலிந்து திணிக்கும் சோகம் இல்லாமல் , ஒரு படமோ , அல்லது ஒரு காட்சியோ  மொத்த பார்வையாளர்களின் சப்த நாடியையும் ஒடுக்கி , மூச்சு சத்தத்தை தவிர எந்த சத்தமும் கேட்காத ஒரு அமைதியை உருவாக்கினால்..பக்கத்துக்கு சீட்டு விகர் பார்க்கும் என தெரிந்தும் கண்ணில் கர கர வென்று கண்ணிர் வர வைத்தால்..அது தான் உலக சினிமா ..

அந்த காட்சியோ , இல்லை படமோ முடிந்து சரியாக , மிக சரியாக  ஆறு  நொடிகள் கழித்து..அதிர்ச்சியில் இருந்து மீண்டு பார்வையாளர் மொத்த பேரின் கை தட்டலில் வான் பிளந்தால் .... அதாண்ட படம் ... அவன் தாண்ட டைரக்டர்..ஏன்..ஒரு டைரக்டர்கும் , நடித்தவற்கும் ரசிகன் தரும் மிக உயர்ந்த அளவிட முடியாத கவுரவம் , விருது , பரிசு எதுவெனில் ..அவன் கண்ணிருடன் கலந்த கை தட்டல் தான்...அந்த மாதிரி ஒரு காட்சி பிசாசு படத்தில் உள்ளது ... ( ஒரு காட்சி மட்டுமே , மொத்த படமும் அல்ல )..மிஸ்கின் உலக சினிமா முயற்சியை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்..சபாஷ் , வாழ்த்துகள் ..

ஆனா மிஸ்கின் அங்கிள் ட சில டௌப்ட்ச் கேட்கலாம்னு ...தப்பா இருந்தா மன்னிச்சுருங்க..கோபப்பட்டு கழுத்த கடிசிராதீங்க .. என்னா பிசாசு படம் தயாரிப்பு பாலா அங்கிள் ..ஆமா ..

1. ஏன் உங்க எல்லா படத்திலும் , ரொம்பபபப நீளமா காட்சிகள் இருக்கு.. அதும் சாதாரண குளிகறது, துணி மாத்தறது இதுக்கெல்லாம் எதுக்கு இவ்ளோ பெரிய லாங் சோட்ஸ.

2.எதுகுனே புரியாம ஏன் எல்லாரும் தலைய தொங்க போடுகறாங்க.
.
3.ஆர்டிஸ்ட் கால்சீட் வாங்கிட்டு ஏன் அவன் மூஞ்ச காட்டாம , காலை மட்டும் காட்றீங்க.
4. சண்டைல ஏன் ஒவ்வொருத்தனா வந்து அடி வாங்குறாங்க..
5. ஏன் அல்லாரும் ரொம்ப லேட்டா ரியாக்ட் பண்றாங்க (நிமிர்வது , குனிவது , திரும்புவது, ஓடறது )
6. இந்த படத்தில ஹீரோ ஏன் பிசாசை விட அதிகமா முடி வச்சிருக்கார்..கடைசி வரை அவர் முடி தெரிஞ்சதே தவிர ..மூஞ்சி தெரியவே இல்ல ..
7. படம் முழுக்க ..படத்துக்கு தேவை இல்லாத, சம்பந்தமே இல்லாத குறியீடுகள் படம் முழுவதும் இருக்குது.. (தண்ணி குடம் ஒழுகுவது, அட்டை பூச்சி ஊர்வது , ஆயா முறைச்சு முறைச்சு பார்ப்பது )
இதை தயவு செய்து களாய்பதாக நினைக்க வேண்டாம் .. ஒரு நல்ல படத்தில் , இந்த கிலிசே காட்சிகள் அதன் தரத்தை பார்வையாளனை உணர வைபதில்லை .. மாறாக எரிச்சல் படுத்துகின்றன .. இவர் படம் இப்படி தான்ய..ஒன்னும் புரியாது ..ஆனா நல்லாருக்கும் என சொல்ல வைக்கின்றன. அந்த ஆதங்கத்தில் தான் இத்தனை கேள்வி ..சரி ..விமர்சனத்துக்கு வருவோம் .. சில படங்களுக்காக நாம் நம்மை தயார் செய்து கொள்வோம் .. அப்படி நான் என்னை என்ன ஆனாலும் சரி ..பயபடாதே என தயார் செய்து கொண்டு சென்ற படம் ..பிசாசு ... ஆனால் படம் முடிந்து வெளி வருகையில் என் கண்ணில் இருந்த நீர் துளிகளே படத்தின் வெற்றி ..
ஒரு பெண் வாகன விபத்தில் அடி படுகிறாள்.. அவளை காப்பாற்ற போராடும் ஹீரோ ..முயற்சி பலனளிக்காமல் அவள் இறக்க, அவள் நினைவாக இருந்த ஒற்றை செருப்பை அவன் வீட்டுக்கு கொண்டு வர ....வந்தது வினை ...அவன் வீட்டில் பேயாக அவள் வாழ்கிறாள்..இது அனைத்தும் நடப்பது படத்தின் முதல் 15 நிமிடங்களில்..அடுத்து நாம் பேய் என்னவோ செய்ய போகிறது என நினைத்தால் ...பீலிங் ஹீரோ ..பிச்சைகாரர்கள் , பீர் பாட்டில் என திசை மாறுகிறது ..அடுத்து வருபவை எல்லலாமே வள..வள ..கொழ, கொழ தான்.. போச்சு ..நம்ம கொடுத்த காசு போச்சு ..என நினைக்கும் போது தான் ..அந்த பெண்ணின் தந்தையாக ராதாரவி அறிமுகம்..தன மகள் தான் பேய் என தெரிந்து உருகி , அழுது, பின்னால் பொய் கொஞ்சும் அந்த அப்பன் பாசம் ..பின்னீடீங்க சார்.. கிரேட்..இந்த காட்சி தான் நான் மேலே சொன்ன கை தட்டல் காட்சி ... அட்டகாசம்..அதற்கு பின் மிஸ்கின் வழக்கமான Tough ட்விஸ்ட் with சிம்பிள் நாட்..அப்புறம் கிளைமாக்ஸ்..அப்புறம் ஆடியன்ஸ் கை தட்டல் என படம் முடிகிறது..
பிசாசு வரும் கட்சிகளில் கிராபிக்ஸ் அண்ட் மகிங் அருமை .கொரிய மற்றும் ஹாலிவுட் படங்கலகு நிகரான மேக் அப் பிசாசின் நகர்வுகளில் கேமரா டிராவல் புது முயற்சி .....பயந்து தூக்கத்தை கெடுக்கும் பேய் படங்கள் ஒருவகை.. சிரிக்க வைக்கும் பேய் படங்கள் மற்றொரு வகை... அனால் பயத்தையும் , பாசத்தையும் , காதலையும் கலந்து கட்டி ஆடிய இந்த பிசாசு புது வகை ...கண்டிப்பா பாருங்க .. நல்லாருக்கும்..


No comments:

Post a Comment