Thursday 20 November 2014

அறிவியலும்... அமானுஷ்யமும்...

 மனித இனம் தோன்றிய நொடி முதல் இன்று வரை ஒவ்வொரு காலங்களிலும் விசித்திர நிகழ்வுகளையும் விளக்க முடியாத பல மர்மங்களையும் சந்தித்துள்ளது .அதை நாம் அக்கணத்தில் அதிசயமாக பார்த்தாலும் உடனடியாக சோதனைகள் மற்றும் ஆராய்சிகள் முலமாக  அதற்கான அறிவியல் காரணங்களை அறிந்து , அது அமானுஷ்யம் அல்ல , அறிவியல் தான் என்று நிரூபித்தோம் .. ஆனாலும் சில மர்மங்கள் எத்தனை சோதனைகள் , ஆராய்சிகள் செய்தும் ,கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கியும் இன்னும் விளக்கபடாமல்  மனித மூளைக்கு எட்டாத இடமான அமானுஷ்யத்தில் நிகழ்கின்றன

ஏன் நம் ஒவ்வொருவருக்கும்  எதாவது ஒரு சம்பவம் அமானுஷ்யமாகவோ,விசித்ரமாகவோ, மரண பீதியை கிளப்பியோ  , முதுகு தண்டை சிலிர்க்க வைத்து, பல நாள் தூக்கத்தை காவு வாங்கி இருக்கலாம்..( எனக்கு வாங்கி இருக்கிறது ) இதுக்கு மேல பேய் கதைகள் வேறு ..என்னதான் காலையில Gladiator a வலம்வந்தாலும் , நைட் ஆனா நம்ம காஞ்சனா லாரன்ஸ் தான் .... நேத்து பொறந்த கொழந்த மாதிரி கலக் கலக்  நு  சிருச்சிட்டு இருந்தவன ,எவ்ளோ கெஞ்சியும்,கதறியும் கேக்காம தர , தர னு உருவம் படத்துக்கு கூட்டிட்டு போய் பேதி வர வச்சாங்க ....ஏன் இப்ப கூட  Conjuring பாத்துட்டு ராத்திரியில மூணு மணிக்கு முளிப்பு வந்திரும் ...நம்ம பார்த்த மொத்த பேய் படமும் , பக்கத்துக்கு வீட்டு தூக்கு மாட்டி செத்த பொண்ணு எல்லாம் அப்ப தான் ஞாபகம் வரும் ..யாரோ நம்ம பேர் சொல்லி கூப்பிடற மாறியே இருக்கும்..முதல்ல கதவு தட்டற சத்தம்..அப்புறம் அதுவா திறக்கிற சத்தம்.. நம்ம பெட் அ பாத்து எதுவோ நகந்து வர்ற மாதிரி தோணும் .என்ன ஆனாலும் சரி .பயத்த மட்டும் மூஞ்சி ல காட்டதே நு ..புது பேட்ட கொக்கி குமார  கண்ண கூட திறக்காம போர்வைக்குள்ள போராடும் போது தான் .......டப் னு கரண்ட் போகும் .. அப்புறம் என்ன .... ஆஸ்பிட்டல்    தான் .... அப்புறம் கைல தாயத்து,  கழுத்தில ஆஞ்சநேயர் னு வாழ்க்கை போகும் ..

ஒரு படத்துக்கே இப்படின்னா , உண்மையிலே நம்ம ஒரு அமானுஷ்யத்தை எதிர் கொண்டால்...அதனுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் .. எத்தனை முயற்சிகள், ஆராய்சிகள் செய்தும் அதனை கட்டுபடுத்த/விளக்க/அழிக்க முடியவில்லை என்றால் ( அப்புறம் என்ன சங்கு, சேவண்டி தான் )..என்ன செய்வோம் ...அப்படி ஒரு அமானுஷ்ய சம்பவம் தான் ...

                                 Belmez faces (aka) Faces of Belmez   

ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல ..43 வருடங்கள் உலகின் மெத்த அறிவியல் ஆரியர்கள் , ஆராய்ச்சியாளர்கள் ,உளவியல் நிபுணர்கள் , அரசாங்கம்எனஅத்தனை பேருக்கும் சவாலாகவும் , தலை வலி யாகவும் இன்னும் விளங்காமல் தொடர்ந்து நடக்கும் மர்மம் ஸ்பெயின் Belmez ல் 1971 ல் நிகழ ஆரம்பித்தது..( யப்பா ஒரு வழியா ஆரம்பிச்சுடாண்டா ).

ஸ்பெயின் நாட்டில் பெல்மெழ் என்ற கிராமத்தில் மரியா என்று ஒரு பெண் வாழ்ந்து வந்தாள்..
(, சாரி ,டென்ஷன் ஆவாதீங்க , நமக்கு கொழந்த மனசு ,மூணாப்பு பாடம் ஞாபகம் வந்த்ருச்சு ...அதன் இப்படி ஆரம்பிச்சேன் . இப்ப பாருங்க )

23-ஆக்-1971 மரியா தான் வீட்டு கிச்சனில் வேலை செய்யும் போது தான் அதை கவனித்தாள்...கிசான் தரையில் வெடிப்புகள் இருந்தன .அது தரையில் ஏற்பட்ட சாதாரண வெடிப்புகள் என நினைத்தாள்.. அனால் ஒரு சீரான முறையில் வெடிப்புகள் தொடர்ந்தன...தொடர்ச்சியாக ..தரை முழுதும் ..ஒவ்வொரு நாளும் வெடிப்புகள் தொடர்ந்தன .இதை கவனித்து கொண்டிருந்த மரியாவின் கண் முன்னே ஒரு நாள் அது நிகழ்ந்தது அதிர்ச்சியில் ஓடிய மரியா அவள் கணவனை கூட்டி காண்பித்தாள்.... அவர்கள் பார்த்தது.

தரையில் ஒரு பெண்ணின் முகம் வரைய பட்டு / தோன்றி இருந்தது....வெறும்.வெடிப்புகளால் !!!

உடனே செல்பி எடுத்து , Painting வித் பேய் என்று Facebook ல் போட்டு லைக் வாங்கவில்லை ...வீட்டுக்கு ஆவி அமுதா வை கூபிட்டு பூஜை போட்டோ , மாட்டுக்கு மீல்ஸ் வெக்கவொ இல்லை .... அமைதியாக இது தரையில் ஏதோ கோளறு என்று ....அவள் கணவனும் , மகனும் சேர்ந்து புதிய தரை போட்டார்கள் .... எல்லாரும் இபோ நிம்மதி....அனால்  ஒரு வாரம் தான் ... புதிய தரையில் வெடிப்பு முகம் மீண்டும்  தோன்ற ஆரம்பித்தது.
அப்போதுதான் மரியாவிற்கும் அவள் குடும்பத்திற்கும் இவை சாதாரண வெடிப்புகள் இல்லை என புரிய ஆரம்பித்தது ..இந்த விஷயம் தன் அடுத்த 40 வருடங்கள் வீட்டின் தனிமையை கெடுக்க போகிறது என்பது அப்போது அவர்களக்கு தெரிந்திருக்காது .... ஆம் ... அன்றில் இருந்து இன்று வரை அந்த வீடு ஆராய்சியாளர்கள், அரசாங்கம் , சோதனை முயற்சிகள் என  பல்வேறு துறை நிபுணர்கள் , மக்கள் , என பல்வேறு தரப்பினரால் எப்போதும் சூழப்பட்டது ... யார் வந்தால் வாங்கடா..எனக்கென்ன என .. எத்தனை முறை அழித்தாலும் மறுபடியும் அத்தனை பேர் கண் முன்னே உருவங்கள் தரையில் தோன்றின .....தரை தோண்டி எடுக்கப்பட்டது . வீட்டின் அத்தனை ஆட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் ...இது பொய்..இதை யாரும் நம்பாதீர்கள் என என அரசாங்கம் திரும்ப திரும்ப கை பிள்ளையாய் கத்தியது ...ஆனாலும் முகம் தோன்றுவது மட்டும் நிற்க வில்லை ....
கடுப்பான கவர்ன்மெண்ட் ... வீடு இருந்த தானே ..மூஞ்சி வர்ற துக்கு ...அப்டின்னு வீட்டின் ஒரு பகுதியை இடித்து கீழே தோண்டினர் .. அப்போது கிடைத்ததுதான் அரசாங்கத்தையே நடுங்க வைத்தது..அரசாங்கத்தை மட்டும் அல்ல..இந்த சம்பவத்தை தொடர்ந்து கவனித்து வந்த உலகத்தையும் தான்..

தோண்டிய இடமெங்கும் ..வீட்டின் கீழே மனித உடல்களின் மிச்ச சொச்ச பாகங்கள் ..
" மாட்னனுகடா.". என்று நினைத்த அரசாங்கம் ..மரியாவின் குடும்பத்தின் மேல் கத்துகீட்ட மொத்த வித்தையையும் இறக்கியது ....ஏற்கனவே இந்த சம்பவங்களினால் புல் டியூன் ஆகி இருந்த மரியா மற்றும் ஊர் மக்கள் இதை பார்த்து கடுப்பாயினர்.. விசரைனையின் முடிவில் அந்த இடம் ஒரு காலத்தில் மயானமாக இருந்தது என்றும் அப்போது புதைகப்பட்ட பிணங்கள் தான் அவை என்பதும் தெரிய வந்தது ...மன்னிப்பு கேட்ட அரசாங்கம் வீட்டின் அப்பகுதியை மீண்டும் கட்டி கொடுத்தது ...ஆனால் வீடு கட்டி முடிக்கப்பட்ட அடுத்த நாளே , தரை , சுவர் என வீடு முழுவதும் ஆண், பெண் என பல் வேறு விதமான உருவங்கள் தோன்ற ஆரம்பித்தன. ....அரசாங்கம் இதை அழித்தது...மறுபடியும் உருவங்கள் தோன்றின .. ஊர் மக்கள் மிரள ஆரம்பித்தனர்.. சிலர் பேயின் வேலை என்றார்கள் ..சிலர் இது அமானுஷ்ய சக்தி என்றார்கள்... World research council சோதனையின் முடுவுகள் அனைத்தும் சாதாரண மண் , சுவர் வெடிப்பு , இயற்கையான முறையில் ஏற்படுவது என தெரிய வந்தது ... சில உளவியல்நிபுணர்கள் மரியாவை  "thoughtographic" மனதில் நினைத்ததை வரையும் சக்தி கொண்டவர் என சொன்னார்கள் ..எத்தனை சோதனைகள்,கூற்றுகள், கோட்பாடுகள் என செய்தாலும்..யாராலும் இது ஏன் ஏற்படுகிறது என கண்டு பிடிக்க முடியவில்லை.தோல்வியை கண்டு அஞ்சிய ஸ்பெயின் அரசாங்கம் ..இவை எல்லாம் மரியாவின் மகன் வரைந்தவை என கூட சொல்லியது .... அனால் மக்கள் இதை " அப்புறம் ராசா " என நம்பவில்லை..


பல்வேறு உருவங்கள் , வகை வகை யாக பல்வேறு உருவ அளவுகளில் , பல்வேறு உணர்வு வெளிபாடுகளுடன் 2004 .பிப் வரை தோன்றியது.. அன்று தான் மரியா தனது 85 வயதில் இறந்தார்..எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அதோடு உருவங்கள் தோன்றவில்லை ... இதற்காகவே காத்திருந்த அரசாங்கம்,மற்றும் பத்திரிகைகள் , ஏன் என கண்டுபிடிக்க முடியாத கடுப்பில் இருந்த அறிவியல் அறிவு ஜீவிகள் எல்லாம் இவை அனைத்தும் மரியாவின் வேலை யே என குற்றம் சாட்டின.... மக்கள் குழம்பினர் .யாரை நம்புவது என தெரியவில்லை .சரியாக மூன்று மாதங்கள் கழித்து.தனது தொடர் அறிக்கைகளினால் .அரசாங்கம் நினைத்ததை நடத்தி இருந்தது ..கடைசியாக மக்கள் வேறு வழி இல்லாமல் மரியாவை ஏமாற்றுகாரி என நம்ப ஆரம்பித்தனர்....

அப்போதுதான் அமானுஷ்யம் தன் முகத்தை மீண்டும் காட்ட ஆரம்பித்தது ... அதே வீட்டில் ..ஆனால் இம்முறை வேற மாதிரியான ஆண் , பெண் முகங்கள் ..இம்முறை பெரிய அளவில் ...
இன்று வரை முகங்கள் தோன்றி கொண்டுதான் இருகின்றன ... அரசாங்கமும் கண்டு பிடித்து கொண்டே தான் இருக்கிறது ...ஆனால் ஒருவருக்கும் விளங்கவில்லை ...அல்லது தெரியவில்லை இது அமானுஷ்யத்தின் முகம் என்று.....

மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்
ஹரி.

2 comments:

  1. This is interesting.
    I wonder if something like this happens in india and how Arnab goswami wil narrate this...

    ReplyDelete
    Replies
    1. Thanks for yr time Annal..arnab say..instead of india... This time the universe wants to know hw these eerie faces have drawn Mr..ragulganthi..

      Delete