Friday 9 January 2015

அறிவியலும் அமானுஷ்யமும் - பாலைவன ஸ்ரீ சக்ரம்

உலகெங்கிலும் இருந்து பாராட்டும் ,பேராதரவும்  அளித்து வரும் வாசக நண்பர்களே..( அடப்பாவி )..எப்ப அடுத்த கட்டுரை , எப்ப , எப்ப னு ஏங்கி தவிக்கும் அன்பர்களே ...உங்கள் மனக்குறை புரிந்து உங்களை இதற்கு மேலும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக கழுத்தறுக்க ...சாரி கருத்து தெரிவிக்க வந்துவிட்டேன் ,,கடைசியா பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன ( ஆ..அப்டியே எழுதிட்டாலும் )...என்ன எழுதுலாம் என்று யோசிச்சு யோசிச்சு கடைசில பிரேசில் நாடுகளில் இருந்து கிடைக்கும் அற்புத தைலம் எருவாமேட்டின் அ தலைல தேச்சது தான் மிச்சம் ..சரி சனி பெயர்ச்சி நேத்து தான் ஆச்சு... நம்ம உடனே ஒரு கட்டுரை எழுதி  வாசகர்களோட துன்பத்துக்கு தூபம் போடுவோம் னு நினைச்சப்ப கிடச்சுதுதான் இந்த விஷயம் .. உடனே இதோ கட்டுரை எழுத ஆரம்பிச்சாச்சு..( செத்தம்டா..இதுக்கு சனி பெயர்சியே பர்வாலே)...
இந்த விஷயத்தை எழுதும் முன் ஒன்றை இங்கே தெளிவு படுத்தி விடுகின்றேன் .. இது மதம் சார்ந்தோ , கடவுள் சார்ந்தோ , யாருக்கும் ஆதரவு தெரிவித்தோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல .. இந்த மாதிரி சம்பவங்கள் உலகில் நடந்துள்ளன , இன்றும் நம் முன் சாட்சியங்களாய் இருகின்றன .. இது மனித அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை தெரிவிக்க மட்டுமே , இது உண்மையா.. இல்லை உட்டாலக்கடி யா என்பதை அறிஞர் பெருமக்கள் ஆகிய தாங்களே முடிவு செய்யவும் ..
அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தின் ஸ்டேன்ஸ் மலைகளின் தென் கிழக்கில் உள்ள இடம் தான் மிக்கி பேசின்..இங்க நிலவும் கடுமையான வெப்பம் இந்த பகுதியில எந்த பய புள்ளையும் நெருங்க விடுலை .. வான் வழியா மட்டுமே இந்த பாலைவனத்தை கடக்க முடியும் ..இப்படி ஒரு காஞ்சு போன பகுதிய பில் மில்லர் ன்ற விமான படை விமானி (Pilot in the Idaho Air National Guard )August 10, 1990 ல அவரோட க்ளிடர் விமானத்துல கடக்கும் போது பார்த்தது தான் இந்த விசயத்தை உலகுக்கு தெரிய படுத்துச்சு ...

அவர் பார்த்தது ..சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு (13.3 மைல்) சதுர அளவுல வரைபடம் மாதிரி குறுக்கும் நெடுக்கும் கோடுகளால் வரையப்பட்ட ஒரு குறியீடு.. அதுவும் சுமார் 9000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதன் முழு வடிவமும் தெரியும் ...

பார்த்த வுடனே  நம்ம மில்லர் ..என்னடா இது ரெண்டு பெக் இன்னிக்கு ஜாஸ்தி ஆயுடுச்சா.. இல்ல மூணு பட தனுஷ மாறி நமக்கு மூளை கலங்கிடுச்சா நு பீல் ஆகாம உடனே படை தளத்துக்கு திரும்பி , இதை பற்றி ஒரு விசாரணை மேற்கொண்டார் .அப்பொழுது தான் இது வெறும் குறியீடோ , வரைபடமோ அல்ல , இது காலம் காலமாக இந்து சமயத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் எனபது தெரிந்தது ..

மேலும் விமான படை தளத்தின் ஆரம்ப கட்ட விசாரணையில் இதற்கு முன் அந்த பகுதியில் பயிற்சி மேற்கொண்ட விமானிகள் இந்த சக்ரா வடிவத்தை பார்கவில்லை எனவும் , மில்லர் இதை பார்பதற்கு 2 நாட்கள்  முன்புதான் அங்கே விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிய வந்தது .. இதனால் அதிர்ச்சியும் ஆச்சர்யமமும் ஒரு சேர , 48 மணி நேரத்தில் யாருமில்லாத , ராணுவ கண்காணிப்பில் இருக்கும் பாலைவனத்தில் எப்படி இவ்வளவு பெரிய சக்ரம் வந்தது என்ற கேள்வி அவர்களை படுத்தியது .. மேலும் 9000 அடி உயரத்தில் பறந்து ஒரு முறை இந்த சக்கரத்தை சுற்றி வருவதற்கு மில்லர் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள்.  23 கிலோ மீட்டர்  தூரத்திற்கு இவ்வளவு துல்லியமாக மணலை தோண்டி , அதுவும் மூன்று அடி ஆழம், இந்த சக்ரத்தை உருவாக்குவது என்பது எந்த மனித சக்தியாலும் சாத்தியமில்லை என்ற உண்மை மட்டும் நன்றாக அவர்களுக்கு நன்றாக உரைத்தது..
முதலில் இது எப்படியோ மனிதர்களால் உருவாக்க பட்டது ..எவனோ காவிரி ஆத்துல மண்ணு அள்ளி மாட்டுனவான் பண்ணுன வேலை .இது முற்றிலும் கப்சா என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கதறின..அனால் August 12, 1990 Boise TV இதை பற்றிய செய்தியை வெளி இட்டது , செய்தி வெளியானவுடன் இது இந்து மதத்தில் வழிபடும் ஸ்ரீ சக்ரம் மேலும் இது எப்படி அமெரிக்க பாலைவனத்தில் அப்படி தோன்றும் , இது பொய் , அமரிக்காவின் திட்டமிட்ட வேலை எனவும்,  இந்த மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும்  உலகெங்கும் கோட் போட்ட கோபிநாத் கள் பல்வேறு செய்திகளை வெட்டி பேச்சு , விடிஞ்சா போச்சு நிகழ்ச்சியில்  விவாதிக்க தொடங்கினர். இதை பார்த்து கடுப்பான அரசாங்கம் , முறையான விசாரணை மேற்கொள்ள தொடங்கியது..உடனடியாக இந்த பகுதி அமரிக்க ஆராய்ச்சி பகுதி ஏரியா 51 கட்டுப்பாட்டில் வந்தது .. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மண் சோதனை நிபுணர்களால் இந்த பகுதி சோதனை செய்ய பட்டுது ..அனால் எவராலும் இது எப்படி ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை ..வழக்கம் போலவே சில நாட்களுக்கு பிறகு இதை பொய் என்று நிரூபிக்க முயற்சி செய்து முடியாமல் ..கடைசியில் . கொஞ்சம் வயிறு செரியில்லை .இதோ இப்ப வந்துறேன்..னு எல்லாரும் தெரிசிட்டங்கா.. என்னடா சோதனை இது என்று மெரசல் ஆன அரசாங்கம் . சரி இதை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன , இதே மாதிரி இன்னொரு சக்ரத்தை உருவாக்கி , இது மனிதனால் தான் உருவாக்கப்பட்டது என உறுதி செய்வோம் என அதற்கான முயற்சியில் இறங்கிய போதுதான் ..அந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது ..
ஆம் , இதை மீண்டும் உருவாக்க முடியாது என்பதே அந்த உண்மை .. கட்டிட கலையில் வல்லுநர் குழு , இந்த வடிவத்தை சாதாரண காகிதத்தில் கூட இதை முழுமையாக வரைய முடியவில்லை ..இது ஒருCIPHER என தெரிய வந்தது ..மேலும் இந்த முயற்சிக்கு 75000 முதல் 100000 டாலர்கள் வரை செலவு ஆகும் எனவும் , முழுமையாக 142 நாட்கள் இதை விரைந்து முடிக்க தேவைப்படும் எனவும் ...இவ்வளவி செய்தாலும் , இது துல்லியமான சக்ரமாக இருக்காது எனவும் தெரிவித்தது,
ஆராய்ச்சியாளர்கள் Dr. James Deardorff, a Research Professor Emeritus at the Atmospheric Science Department of Oregon State University மற்றும் அவரது நண்பர்கள் Don Newman and Alan Decker, இதை பற்றிய ஆராய்சியை சவாலாக மேற்கொண்டனர்.. அப்போதுதான் இந்த வடிவம் ஒன்பது உட்கட்டு முக்கோணங்கள் அடங்கியது , அதில் நான்கு மேல் நோக்கியும் , ஐந்து கீழ் நோக்கியும் ( சிவா , சக்தி ) இந்த முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முடிவில் தாமரை இதழ்கள் போன்ற வடிவத்தை உருவாகுவதும் தெரிய வந்தது ..மேலும் இந்த ஒன்பது முக்கோணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேலும் 28 சிறிய முக்கோணங்களை உருவாக்குகிறது ..இவை அனைத்தும் ஆதார மையமான ஒரு சிறிய புள்ளியில் இருந்தே ஆரம்பிகிறது ..இவை அனைத்தையும் சதுர வடிவ தாந்திரிய வடிவம் காக்கின்றது  என்பதையும் கண்டுபிடித்தனர். இதை மனித முயற்சியால் உருவாக்கவே முடியாது என்பதை தெரிவித்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை .. உடனடியாக இவர்களது ஆராய்ச்சியின் முடிவுகளை பிரிட்டிஷ் பத்திரிகை UFO - Volume 6, # 3 in 1991 under the heading, ‘A Symbol on the Oregon Desert' என்ற தலைப்பில் வெளிஇட்டது.


15 வருடங்கள் விடா முயற்சியாக போராடிய இந்த மூவரும் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு கடைசியில் கண்டு பிடித்த உண்மை .. எல்லாம் தொடங்கும் ஆதார புள்ளி ..பூமி எனவும் , அதை சுற்றி உள்ள ஒன்பது முக்கோணங்கள் 9 கோள்கள் எனவும், மேல்நோக்கிய 12 சிறிய முக்கோணங்கள் சூர்ய மண்டலத்தை சார்ந்த 12 ராசிகள் எனவும் , கீழ் நோக்கிய 16 முக்கோணங்கள் புது நிலவில் இருந்து முழு நிலவாகும் 16 காலங்கள் ( நாட்கள் ) என்பதும் இதை அனைத்தையும் காக்கின்ற தாந்த்ரிய வடிவம் பால்வெளி எனவும் கண்டு பிடித்தனர் ..ஆனால் இதுவரை இந்த சிக்கலான வடிவம் எப்படி அந்த பாலைவனத்தில் உருவானது என்பது மட்டும் கடைசி வரை எவருக்கும் தெரியவில்லை ...அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை .. இது இயற்கையின் இயல்பாடா , அல்லது மனிதனின் செயல்பாடா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்
இதை பற்றிய விபரங்கள் மற்றும் கட்டுரைகள் –

http://www.labyrinthina.com/sriyantra.htm
http://www.bookofresearch.com/unexplained-mystery-of-oregon-sri-yantra.htm

சரி ரசிகர்கள் .. (ஒ சாரி,)...நேயர்கள் எல்லாருக்கும்  (ஒ மன்னிச்சு ) சரி நண்பர்கள் எல்லாருக்கும் ( இப்ப போதுமா , நம்மளும் ஒரு எழுத்தாளன் அகலாம்ன நடக்காது போல ).. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்
ஹரி.



1 comment:

  1. இதை வரைந்தது Bill Witherspoon எனும் ஆராய்ச்சியாளர் மற்றும் அவரது குழுவினர்.

    http://www.sriyantraresearch.com/Article/Effects/Sri_Yantra_Effects.html

    ReplyDelete