Saturday 5 March 2016

கணிதன் - திரைவிமர்சனம்

போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் நெட்வொர்க் கை கண்டுபிடித்து அழிக்கும் ஒரு ரிபோர்டர் பற்றிய கதை .புதிய கதை களம்..ஆனால். கதையில் இருக்கும் சுவாரசியம் திரை கதையில் இல்லை.. ஒரு சில காட்சிகளை தவிர மற்றவை அனைத்தும் அரத பழசான திரை கதை பார்முலா..பார்த்தவுடன் காதல்..குத்து பாட்டு..அம்மா பாசம் ..வில்லனின் ஆட்கள் அனைவரிடமும் துப்பாக்கி...எல்லா புல்லட் களில் இருந்தும் எஸ்கேப் ஆகும் ஹீரோ..உயிரை கொடுத்து உதவும் நண்பன் என காட்சிகள் Candy Crush Saga விளையாட வைக்கின்றன ..
வில்லனாக முதலில் ஜாக்கி ஷெரப் நடிபதாக இருந்த பின் தருண் அரோர செய்திருக்கிறார் ..இவர் அதர்வா வை கண்டு பிடிப்பது எல்லாம் துப்பாக்கி பட காட்சிகளை நினைவு படுத்துகின்றன ..
எந்த பின்புலமும் இல்லாத, போலி சான்றிதழ் தயாரிக்கும் ஒரு சாதாரண வில்லன் எப்படி இவ்வளவு பேரை சுட்டு கொல்கிறார்.. அதுவும் ஒரு மீடியா சேனல் அலுவலகத்துக்குள் நுழைந்து சுடுவதெல்லாம் ...போங்க சார்...செம காமெடி ....
கணிதன் என்ற பெயருக்கும் , கதைக்கும் ஏன் ஒரு காட்சிக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை ... இசை சிவமணி .. எதிர் பார்த்த மாதிரியே பாடல்களில் காதுகளை கடித்து துப்பி...பின்னணி இசையில் பேண்டேஜ் போடுகிறார்.
மொத்த படமும் காட்டு மொக்கை இல்லை ...போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் நெட்வொர்க் ..அதனால் பாதிக்கபடும் மாணவர் வாழ்க்கை .. எல்லா டிபர்ட்மெண்டிலும் இருக்கும் போலி பட்டதாரிகள் ..இவர்களின் தவறால் தினம் தினம் ஏற்படும் இறப்புகள் என காட்டிய விதம் கவனம் ஈர்க்கிறது ..முதலில் சொன்ன திராபைகளை தூக்கிவிட்டு இந்த காட்சிகளை இன்னும் குறைந்த நேரத்தில் காட்டி இருந்தால் இந்த படம் ....இன்னொரு தெகிடி.
.

--
ஹரி

No comments:

Post a Comment