Friday 28 November 2014

ஆன்சைட் அனுபவங்கள் - கடைசி பாகம்


எப்படியோ அடிச்சு பிடிச்சு ஆன்சைட் வந்தாச்சு, இப்ப அந்த ஆன்சைட் ஊருல நம்ப ரொம்ப காமென்-ஆ சந்திக்கிற சிக்கல்கள் என்னான்னு பார்போம்.


ஏர்போர்ட்ல நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..) தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.


ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:

** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.
அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்....

நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.ஆனா அங்க பேப்பரை வேற எதுக்கோ யூஸ் பண்ணுவான் வெள்ளைகாரன்.

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,

“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”....
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும் குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…


அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  சுறா படத்த IMAX ல பார்த்த மாதிரி அலறி அப்பறமாதான் அடங்குவான்…

வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!


இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. அப்புறம் எவனும் யாரையும் கண்டுக்க மாட்டேன்றான்..அம்மா உணவகம் இல்ல ..பாய் கட பிரியாணி இல்ல .. பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.


கிட்ட தட்ட நம்ப வந்த வேலை பாதி முடிசிருக்கும். அதுக்குள்ள தம்பி நீ ஆணி புடுங்குன வரைக்கும் போதும், பட்ஜெட் மேல ஏறுது, நீ ஊருக்கு திரும்பி வான்னு சொல்லி வர சொல்லிருவாங்க. அப்பிடியே அந்த கடைசி வீக் என்டுல அந்த ஊருல இருக்குற பெரிய ஷாப்பிங் மால் போய் நம்ப வீட்டு ஆளுங்களுக்கு தேடி தேடி வெளிநாட்டு பொருள்களை (சென்ட், வாக்மேன், ஐ-பேட்) எல்லாம் வாங்கிட்டு சந்தோஷமா ஊருக்கு கிளம்புவோம். எப்படி இந்த ஊருக்கு வரும் போது மனசு சந்தோஷமா இருந்திச்சோ அத விட பல மடங்கு சந்தோஷம் நம்ப சொந்த ஊருக்கு போகும் போது இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்திச்சு. கடைசியில ப்லைட் நம்ப ஊருல லேன்ட் ஆகும் போது கிடைக்கிற திருப்தி இருக்கே. அதையும் அனுபவிக்கணும்.


ஆன்சைட்ன்றது இளைய தளபதி விஜய் படம் மாதிரி, தியேட்டர் உள்ள இருக்குறவன் வெளிய வர பார்ப்பான்,  வெளிய இருக்கறவன் தியேட்டர் உள்ள போகனும் பார்ப்பான். படத்தோட டிரைலர் மட்டும் தான் நல்லா இருக்கும். புல் படத்தை நீங்க ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான் பார்க்கணும்.... அது.


கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


Thursday 27 November 2014

ஆன்சைட் அனுபவங்கள் - பாகம் - 2

அதுதான் ஆன்சைட் போறதுக்கு எல்லா தடையும் தாண்டிடோமே அப்பறம் என்ன லைட்டான் நம்பிக்கைன்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, விஜய் அங்கிள் பிரண்ட்ஸ் படத்து கிளைமாக்ஸ் ல ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் இருக்கு…அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு,  தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்…
கொஞ்ச நாள் கழிச்சு , நம்ம கண்ணீர் எ பாத்து கம்பனி மறுபடியும் ஒரு சான்ஸ் கொடுக்கும் ..இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும். நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்…கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்…

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னு “என்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு”  பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும் நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பே”ன்னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.

 மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்… பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க…பயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!
நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்…
மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!
கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்…ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்…யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம்…கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..

எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு Loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்..ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்...

நம்ம பீலிங் எல்லாம் ப்ளைட் உள்ள போய் ஏர் கோஸ்டாஸ் பார்கர வரைக்கும் தான் .எப்டி பார்த்தாலும், அது ஒரு தடவை அண்ட்ரியா மாறியும் , இன்னொரு பக்கம் நயன் தாரா மாறியும் தெரியும் . அதுவும் நம்ம பக்கத்துல வந்து ஏங்க பெல்ட் போடுங்க .உங்க சைனா மொபைல் ல ஆப் பண்ணுங்க .சாஞ்சு உட்காராதே சனியனேனு கொஞ்சும் போது நமக்கு அப்டியே மெரசல் ஆயிடும்.அப்புறமாதீடுர்னு ஸ்பிக்கர்ல,நான்தான் உங்க கேப்டன் பேசுறேன் சொன்னவுடனே ,நாம நம்ம கேப்டன் விஜயகாந்த னு ஒருமரண மொக்கைய போட்டு பயனத்த தொடங்குவோம் ... ரன் வே ல வண்டிய திருப்பும் போதே நமக்கு வயத்த கலக்க ஆரம்பிச்சுரும் .ஆனாலும் பக்கத்துக்கு சீட்டு விகர் பார்த்து நான்.டெய்லி ப்ளைட் ல தான் பல்லு விளக்குவேன் ரேஞ்சு கு சிறுச்சி வைப்போம் ..ப்ளைட் டேக் ஆப் ஆகும் என்ன தான் மூஞ்சிய வெரப்ப வைச்சாலும் நம்ம  மனசு காஞ்சனா கோவை சரளா ரேஞ்சு கு .. காளியாத்த, மாரியாத்த, நீலியாத்தா, செல்லாத்தா னு பீதில பிளிரும் ..

சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல சென்னை-28 ஜெய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு ஸ்கூல்ல, மொத நாள் LKG கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரி கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக. 

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு “நோ தேங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.

பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (US ன்னு வெச்சுப்போம் – ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.
அந்த ஊரு இமிகரேசன் செக்கிங்..

ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(ஏங்க வீட்டு நாய் குட்டி போற்றுச்சா?) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும். இந்த மாதிரி பார்டன் பாட்டை ஒரு வாட்டி நான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்ல ஒரு ஜாக்சன் துரை கிட்ட பாடி மாட்டிக்கிட்டு முழிச்ச்சேன். அந்த ஜாக்சன் துரை கிட்ட இருந்து தப்பிச்சு ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து அந்த ஊரை கண்ணு குளிர பார்த்தா தான் நம்ப பல நாள் ONSITE கனவு நிறைவேருன மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அத வார்த்தையால சொல்ல முடியாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் புரியும். அந்த பீல கொஞ்சம் நேரம் அனுபவிச்சுட்டு அப்படியே பொட்டிய தூக்கிட்டு டாக்ஸி தேடி அலைய வேண்டியது தான். 

அந்த ஊருல நமக்கு ஏற்படுற அனுபவத்தை அடுத்த கடைசி பதிவுல பார்போம். 

டிஸ்கி:
இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவை எழுதியவர் பாலா, நான் அத கொஞ்சம்அப்டி, இப்டி  மாத்தி இங்க பதிவு செய்து இருக்கேன்,அவர் அன்பே சிவம் அப்ப்டின்குற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார்..So All Credit goes to Mr, Bala..


மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்


ஹரி.
Facebook : hari.lifeisfun

Wednesday 26 November 2014

அறிவியலும் அமானுஷ்யமும் - Nazca (Nasca) Lines

கடந்த பதிவிற்கு அமோக ஆதரவு தந்து ..இதோட போதும் ராசா.. இதுக்கு மேல வேண்டாம் என்று கத்தி கதறி கண் கலங்கி என்னை என்றும் ஊக்கு விக்கும் ( ஊக்கு வித்தியா ..எப்ப ) என் நண்பர்களுக்கு நன்றி ...அது ஏன் நு தெரியல.. சின்ன வயசுல இருந்தே நமக்கு இந்த விளங்காத மர்மங்கள் , ஏலியன் பயலுக, பேய் கதை, பிசாசு கதை ந ஒரு ஆர்வம் , எப்ப வீட்டுல கரண்ட் போனாலும் நம்ம கூட்டிஉட்கார வைச்சு இந்த மாதிரி எதாவது கதையா சொல்ல சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க ( அரம்பிசுடண்டா.சாமி  ).. நானும் நம்ம கூகுள் ஓட தம்பி கோகுல் மாதிரி சும்மா அளந்து விடுவேன் ... எல்லாரும் சிரிச்சி , கத்தி கதறும் போது கரண்ட் வந்திரும் ( சில சமயம் , எல்லாரும் போனதும் யாரோ நைட் பூரா சிரிசிட்டே இருக்கிற சத்தம் கேக்கும் )..

அப்ப அரன்பிசது தான் இந்த அறிவியலும் அமானுஷ்யமும்..பொதுவாக நாம் எல்லா நிகழ்வுகளையும் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் நம்பி விடுவதில்லை..அதற்கான ஆதாரம் அல்லது காரணத்தை தேடுகிறோம்.இரண்டுமே கிடைக்கவில்லை எனில் .இதெல்லாம் கட்டு கதைகள் .அல்லது போலியான உருவாக்கப்பட்டவை என முடிவு செய்கிறோம் ..ஆனால் நம் அறிவிற்கும் எட்டாத நிகழ்வுகள் பூமி தோன்றிய காலம் முதல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன..இதை நாம் இயற்கை ,ஒரு சக்தி, கடவுள்,என நமக்கு வசதியான வகையில் புரிந்து கொள்ளுகிறோம் .. ஏன் நம் அறிவால் பிக் பேங் தியரி வரை தான் நெருங்க முடிந்தது .. இது 1000 பக்கங்கள் உடைய புத்தகத்தின் ஒரு புள்ளியை கண்டு பிடித்ததற்கு சமம் எனலாம்..(இப்ப என்னதான் சொல்ல வர்ற   ) யாரவது நம்ம கிட்ட உலகம் எப்படி வந்தது நு கேட்டா..நம்மளும் கமல் சார் மாறி , உலகம் என்பது ஒரு மைய புள்ளியிலோ அல்லாத மனித புள்ளியிலோ , தனி மனிதம் சாராத, தீவிரவாதம் இல்லாத , இன்னும் சரியாய் சொல்ல வேண்டுமானால் ( என்னது இன்னுமா னு ஒடுருவாங்க )அதனால நடந்து முடிஞ்ச இதை எல்லாம் விட்டுட்டு  இப்பவும் நம் முன் அமானுஷ்யத்தின்  ஆதாரமாய் , நம் அறிவிற்கு புலபடாமல் இன்றும் மர்மங்களாக இருக்கும் விசயங்களை இந்த தொடரில் பாப்போம் ( என்னது தொடரா..செத்தம்டா) பார்ப்போம்...

நாம சின்ன வயசுல படம் வரயிறேன் னு சும்மா டாவின்சி ரேஞ்சு  கு பீட்டர் விட்டுட்டு கடைசில நாலஞ்சு கோட்ட அங்கிட்டும் இங்கிட்டும் கிறுக்கி வைப்போம் ..அதுக்கே பென்சில் சரில, பேப்பர் குவலிடிய இல்ல னு சீன போடுவோம் .. ஆனா நமக்கு மேல இருக்கும் சக்தி .அது கடவுளோ , இல்ல ஏலியனோ (இலியானா இல்ல ) இந்த உலகத்தின் மீது வரைந்த ஓவியங்கள் இன்னும் இருக்கு .. அது தான்  Nazca lines. 

நசுகா கோடுகள் என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நசுகா என்னுமிடத்தில் அமைந்த, மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும்..சுமார் 500 கிலோ மீட்டர் சதுர பரபளவில் இதை வரைந்தவர் யார் அல்லது உருவானது எப்படி என எதை ஆராய்சிகள் செய்தும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை ...

உதாரணத்திற்கு இப்போது சென்னையின் ஒவ்வொரு இடத்தலும் மண்ணை தோண்டி , முதலின் கோடுகளை ஏற்படுத்தி , மொத்த சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் இதே போல் ஏற்படுத்திய  கோடுகளை ஒரு புள்ளியில் இணைத்து மிக நேர்த்தியாக ஓவியம் வரைந்தால் .. அது வான் வெளி யில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியுமானால் .... சொல்லுங்கள் இப்போது இருக்கும் விஞ்ஞானத்தில் இது சாத்தியமா .. சாத்தியம் எனில் எத்தனை காலம் , எத்தனை உழைப்பை அந்த ஓவியம் ஏற்கும் ... ஆனாலும் அது கச்சிதமாக (பெர்பெக்ட்) இருக்குமா என்பது சந்தேகம் தான் .. ஆனால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்திருகிறது

 .

ஒன்றல்ல, இரண்டல்ல,  50 கும் மேற்பட்ட சித்திரங்கள், முறையான கோடுகள் , இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்... சித்திரங்கள் மூன்று விதமான வகைகளில் உள்ளன ..1.நேர் கோடுகள். 2.கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள்.
3.விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.


ஒன்றல்ல, இரண்டல்ல,  70 கும் மேற்பட்ட சித்திரங்கள், முறையான கோடுகள் , இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்... சித்திரங்கள் மூன்று விதமான வகைகளில் உள்ளன ..1.நேர் கோடுகள். 2.கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள்.
3.விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.
                                  

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன. நாம் பெரு சென்றாலும் இந்த ஓவியங்களை வானில்பல கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும் ..

இது வரை நடந்த ஆராய்ச்சிகள் எதுவும் ஒரு உறுதியான , முழுமையான முடிவை தரவில்லை என்றாலும் மனிதர்களால் இது சாத்தியமே இல்லை என நிரூபிகபட்டு இருக்கிறது ..

 எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று தனது  chariots of the gods book ல் கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.




இந்த நேர்தியான உருவங்களை , கோடுகளை இவ்வளவு அழகாக , நேர்த்தியாக  உலக பந்தின் மீது  வரைந்தது யார் ,

நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ..இது மனிதர்களா , இல்லை மனிதனை மீறிய சக்தியா என்று ..



மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்
ஹரி.



Tuesday 25 November 2014

ஆன்சைட் அனுபவங்கள் - பாகம் -1

ONSITE அதாவது தற்காலிக குடிப்பெயர்ச்சி பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அது பத்தி தெரியாதவங்களுக்கு அத பத்தின விளக்கம் தான் இந்த பதிவு. தற்காலிக குடிப்பெயர்ச்சி அப்ப்டின்குற பேருல சுமார் 2~3 வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பார்வேர்ட் மெயில் வந்துச்சு. அதா முழுசா படிச்சு பார்த்தா கிட்ட தட்ட என்னோட முத ONSITE அனுபவத்தை அப்படியே என் கன்னுமுன்னடி கொண்டு வந்து நிறுத்துன மாதிரி ஒரு பீலிங். அந்த அனுபவத்தை உங்களுக்கும் குடுக்கணும் அப்படிங்கற நோக்கத்துல வந்தது தான் இந்த பதிவு..



“Have you been to States before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough   experience..Should have been to onsite at-least once”
“yeah…I could have been… But…”
இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..
“அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
"சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…
ஆன்சைட் – மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை..


சரி ஆன்சைட்னா என்னாங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற Process தான் Onsite-Offshore co-ordination.


இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் தெய்வம் தந்த வீடு சீரியல்ல வர்ற சித்ரா தேவி , பானுமதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…
அப்படி போறதுனால என்னங்க…
நல்லா கேட்டிங்க….

** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!
** நம்ப Negotiation Skills ம், Business Communication ம் நல்லா இம்ப்ரூவ் ஆகும்!
** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய (கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.
** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்…
(அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.)

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா பேஸ் புக்லயோ, ஆர்குட்லயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…
இங்க அவனவன் 42 Degree  வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு Snow Fallல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு Resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…
மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் Resource அ வெச்சு கிட்டு ஜூனியர் Resource யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…

ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ” நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த “வருமோவராதோ” ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “நாசமா போச்சு”ப்ரொஜெக்ட கன்டினியூபண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம்  கொஞ்ச நாளைக்கு சியான் விக்ரம் மாதிரி “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..
ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா நேக்கா ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…

மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே Squad-ல ரெய்னாவுக்கு பதில பார்த்திவ் படேல எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.

ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் Work Permit எடுக்கணும் அப்பறம் Visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) UK னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ Consulate ல Submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி Computerized லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்” சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு மந்திரச்ச விட்ட கொரங்கு மாதிரியே திரியுவானுக!


நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…

இல்ல சினிமால சொல்றாப்ல “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.. இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்…அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்…அவங்களும் Monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த Monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்.

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.

இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுக…இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்…

திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.

ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்…கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்…அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு (“மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்.

ஆனாலும் அந்த நம்பிக்கையில மண்ணு எப்ப வேணும்னாலும் விழலாம். அது எந்த மாதிரி கலர் புல் மண்ணுன்னு அடுத்த பாகத்துல பார்போம்.

டிஸ்கி:
இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவை எழுதியவர் பாலா, அவர் அன்பே சிவம் அப்ப்டின்குற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். இந்த மாதிரி ஆன் சைட் அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டு இருந்தா அவர் பதிவுல போய் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லுங்க. 

Thursday 20 November 2014

அறிவியலும்... அமானுஷ்யமும்...

 மனித இனம் தோன்றிய நொடி முதல் இன்று வரை ஒவ்வொரு காலங்களிலும் விசித்திர நிகழ்வுகளையும் விளக்க முடியாத பல மர்மங்களையும் சந்தித்துள்ளது .அதை நாம் அக்கணத்தில் அதிசயமாக பார்த்தாலும் உடனடியாக சோதனைகள் மற்றும் ஆராய்சிகள் முலமாக  அதற்கான அறிவியல் காரணங்களை அறிந்து , அது அமானுஷ்யம் அல்ல , அறிவியல் தான் என்று நிரூபித்தோம் .. ஆனாலும் சில மர்மங்கள் எத்தனை சோதனைகள் , ஆராய்சிகள் செய்தும் ,கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கியும் இன்னும் விளக்கபடாமல்  மனித மூளைக்கு எட்டாத இடமான அமானுஷ்யத்தில் நிகழ்கின்றன

ஏன் நம் ஒவ்வொருவருக்கும்  எதாவது ஒரு சம்பவம் அமானுஷ்யமாகவோ,விசித்ரமாகவோ, மரண பீதியை கிளப்பியோ  , முதுகு தண்டை சிலிர்க்க வைத்து, பல நாள் தூக்கத்தை காவு வாங்கி இருக்கலாம்..( எனக்கு வாங்கி இருக்கிறது ) இதுக்கு மேல பேய் கதைகள் வேறு ..என்னதான் காலையில Gladiator a வலம்வந்தாலும் , நைட் ஆனா நம்ம காஞ்சனா லாரன்ஸ் தான் .... நேத்து பொறந்த கொழந்த மாதிரி கலக் கலக்  நு  சிருச்சிட்டு இருந்தவன ,எவ்ளோ கெஞ்சியும்,கதறியும் கேக்காம தர , தர னு உருவம் படத்துக்கு கூட்டிட்டு போய் பேதி வர வச்சாங்க ....ஏன் இப்ப கூட  Conjuring பாத்துட்டு ராத்திரியில மூணு மணிக்கு முளிப்பு வந்திரும் ...நம்ம பார்த்த மொத்த பேய் படமும் , பக்கத்துக்கு வீட்டு தூக்கு மாட்டி செத்த பொண்ணு எல்லாம் அப்ப தான் ஞாபகம் வரும் ..யாரோ நம்ம பேர் சொல்லி கூப்பிடற மாறியே இருக்கும்..முதல்ல கதவு தட்டற சத்தம்..அப்புறம் அதுவா திறக்கிற சத்தம்.. நம்ம பெட் அ பாத்து எதுவோ நகந்து வர்ற மாதிரி தோணும் .என்ன ஆனாலும் சரி .பயத்த மட்டும் மூஞ்சி ல காட்டதே நு ..புது பேட்ட கொக்கி குமார  கண்ண கூட திறக்காம போர்வைக்குள்ள போராடும் போது தான் .......டப் னு கரண்ட் போகும் .. அப்புறம் என்ன .... ஆஸ்பிட்டல்    தான் .... அப்புறம் கைல தாயத்து,  கழுத்தில ஆஞ்சநேயர் னு வாழ்க்கை போகும் ..

ஒரு படத்துக்கே இப்படின்னா , உண்மையிலே நம்ம ஒரு அமானுஷ்யத்தை எதிர் கொண்டால்...அதனுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் .. எத்தனை முயற்சிகள், ஆராய்சிகள் செய்தும் அதனை கட்டுபடுத்த/விளக்க/அழிக்க முடியவில்லை என்றால் ( அப்புறம் என்ன சங்கு, சேவண்டி தான் )..என்ன செய்வோம் ...அப்படி ஒரு அமானுஷ்ய சம்பவம் தான் ...

                                 Belmez faces (aka) Faces of Belmez   

ஒரு வருடம் அல்ல, இரண்டு வருடம் அல்ல ..43 வருடங்கள் உலகின் மெத்த அறிவியல் ஆரியர்கள் , ஆராய்ச்சியாளர்கள் ,உளவியல் நிபுணர்கள் , அரசாங்கம்எனஅத்தனை பேருக்கும் சவாலாகவும் , தலை வலி யாகவும் இன்னும் விளங்காமல் தொடர்ந்து நடக்கும் மர்மம் ஸ்பெயின் Belmez ல் 1971 ல் நிகழ ஆரம்பித்தது..( யப்பா ஒரு வழியா ஆரம்பிச்சுடாண்டா ).

ஸ்பெயின் நாட்டில் பெல்மெழ் என்ற கிராமத்தில் மரியா என்று ஒரு பெண் வாழ்ந்து வந்தாள்..
(, சாரி ,டென்ஷன் ஆவாதீங்க , நமக்கு கொழந்த மனசு ,மூணாப்பு பாடம் ஞாபகம் வந்த்ருச்சு ...அதன் இப்படி ஆரம்பிச்சேன் . இப்ப பாருங்க )

23-ஆக்-1971 மரியா தான் வீட்டு கிச்சனில் வேலை செய்யும் போது தான் அதை கவனித்தாள்...கிசான் தரையில் வெடிப்புகள் இருந்தன .அது தரையில் ஏற்பட்ட சாதாரண வெடிப்புகள் என நினைத்தாள்.. அனால் ஒரு சீரான முறையில் வெடிப்புகள் தொடர்ந்தன...தொடர்ச்சியாக ..தரை முழுதும் ..ஒவ்வொரு நாளும் வெடிப்புகள் தொடர்ந்தன .இதை கவனித்து கொண்டிருந்த மரியாவின் கண் முன்னே ஒரு நாள் அது நிகழ்ந்தது அதிர்ச்சியில் ஓடிய மரியா அவள் கணவனை கூட்டி காண்பித்தாள்.... அவர்கள் பார்த்தது.

தரையில் ஒரு பெண்ணின் முகம் வரைய பட்டு / தோன்றி இருந்தது....வெறும்.வெடிப்புகளால் !!!

உடனே செல்பி எடுத்து , Painting வித் பேய் என்று Facebook ல் போட்டு லைக் வாங்கவில்லை ...வீட்டுக்கு ஆவி அமுதா வை கூபிட்டு பூஜை போட்டோ , மாட்டுக்கு மீல்ஸ் வெக்கவொ இல்லை .... அமைதியாக இது தரையில் ஏதோ கோளறு என்று ....அவள் கணவனும் , மகனும் சேர்ந்து புதிய தரை போட்டார்கள் .... எல்லாரும் இபோ நிம்மதி....அனால்  ஒரு வாரம் தான் ... புதிய தரையில் வெடிப்பு முகம் மீண்டும்  தோன்ற ஆரம்பித்தது.
அப்போதுதான் மரியாவிற்கும் அவள் குடும்பத்திற்கும் இவை சாதாரண வெடிப்புகள் இல்லை என புரிய ஆரம்பித்தது ..இந்த விஷயம் தன் அடுத்த 40 வருடங்கள் வீட்டின் தனிமையை கெடுக்க போகிறது என்பது அப்போது அவர்களக்கு தெரிந்திருக்காது .... ஆம் ... அன்றில் இருந்து இன்று வரை அந்த வீடு ஆராய்சியாளர்கள், அரசாங்கம் , சோதனை முயற்சிகள் என  பல்வேறு துறை நிபுணர்கள் , மக்கள் , என பல்வேறு தரப்பினரால் எப்போதும் சூழப்பட்டது ... யார் வந்தால் வாங்கடா..எனக்கென்ன என .. எத்தனை முறை அழித்தாலும் மறுபடியும் அத்தனை பேர் கண் முன்னே உருவங்கள் தரையில் தோன்றின .....தரை தோண்டி எடுக்கப்பட்டது . வீட்டின் அத்தனை ஆட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் ...இது பொய்..இதை யாரும் நம்பாதீர்கள் என என அரசாங்கம் திரும்ப திரும்ப கை பிள்ளையாய் கத்தியது ...ஆனாலும் முகம் தோன்றுவது மட்டும் நிற்க வில்லை ....
கடுப்பான கவர்ன்மெண்ட் ... வீடு இருந்த தானே ..மூஞ்சி வர்ற துக்கு ...அப்டின்னு வீட்டின் ஒரு பகுதியை இடித்து கீழே தோண்டினர் .. அப்போது கிடைத்ததுதான் அரசாங்கத்தையே நடுங்க வைத்தது..அரசாங்கத்தை மட்டும் அல்ல..இந்த சம்பவத்தை தொடர்ந்து கவனித்து வந்த உலகத்தையும் தான்..

தோண்டிய இடமெங்கும் ..வீட்டின் கீழே மனித உடல்களின் மிச்ச சொச்ச பாகங்கள் ..
" மாட்னனுகடா.". என்று நினைத்த அரசாங்கம் ..மரியாவின் குடும்பத்தின் மேல் கத்துகீட்ட மொத்த வித்தையையும் இறக்கியது ....ஏற்கனவே இந்த சம்பவங்களினால் புல் டியூன் ஆகி இருந்த மரியா மற்றும் ஊர் மக்கள் இதை பார்த்து கடுப்பாயினர்.. விசரைனையின் முடிவில் அந்த இடம் ஒரு காலத்தில் மயானமாக இருந்தது என்றும் அப்போது புதைகப்பட்ட பிணங்கள் தான் அவை என்பதும் தெரிய வந்தது ...மன்னிப்பு கேட்ட அரசாங்கம் வீட்டின் அப்பகுதியை மீண்டும் கட்டி கொடுத்தது ...ஆனால் வீடு கட்டி முடிக்கப்பட்ட அடுத்த நாளே , தரை , சுவர் என வீடு முழுவதும் ஆண், பெண் என பல் வேறு விதமான உருவங்கள் தோன்ற ஆரம்பித்தன. ....அரசாங்கம் இதை அழித்தது...மறுபடியும் உருவங்கள் தோன்றின .. ஊர் மக்கள் மிரள ஆரம்பித்தனர்.. சிலர் பேயின் வேலை என்றார்கள் ..சிலர் இது அமானுஷ்ய சக்தி என்றார்கள்... World research council சோதனையின் முடுவுகள் அனைத்தும் சாதாரண மண் , சுவர் வெடிப்பு , இயற்கையான முறையில் ஏற்படுவது என தெரிய வந்தது ... சில உளவியல்நிபுணர்கள் மரியாவை  "thoughtographic" மனதில் நினைத்ததை வரையும் சக்தி கொண்டவர் என சொன்னார்கள் ..எத்தனை சோதனைகள்,கூற்றுகள், கோட்பாடுகள் என செய்தாலும்..யாராலும் இது ஏன் ஏற்படுகிறது என கண்டு பிடிக்க முடியவில்லை.தோல்வியை கண்டு அஞ்சிய ஸ்பெயின் அரசாங்கம் ..இவை எல்லாம் மரியாவின் மகன் வரைந்தவை என கூட சொல்லியது .... அனால் மக்கள் இதை " அப்புறம் ராசா " என நம்பவில்லை..


பல்வேறு உருவங்கள் , வகை வகை யாக பல்வேறு உருவ அளவுகளில் , பல்வேறு உணர்வு வெளிபாடுகளுடன் 2004 .பிப் வரை தோன்றியது.. அன்று தான் மரியா தனது 85 வயதில் இறந்தார்..எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அதோடு உருவங்கள் தோன்றவில்லை ... இதற்காகவே காத்திருந்த அரசாங்கம்,மற்றும் பத்திரிகைகள் , ஏன் என கண்டுபிடிக்க முடியாத கடுப்பில் இருந்த அறிவியல் அறிவு ஜீவிகள் எல்லாம் இவை அனைத்தும் மரியாவின் வேலை யே என குற்றம் சாட்டின.... மக்கள் குழம்பினர் .யாரை நம்புவது என தெரியவில்லை .சரியாக மூன்று மாதங்கள் கழித்து.தனது தொடர் அறிக்கைகளினால் .அரசாங்கம் நினைத்ததை நடத்தி இருந்தது ..கடைசியாக மக்கள் வேறு வழி இல்லாமல் மரியாவை ஏமாற்றுகாரி என நம்ப ஆரம்பித்தனர்....

அப்போதுதான் அமானுஷ்யம் தன் முகத்தை மீண்டும் காட்ட ஆரம்பித்தது ... அதே வீட்டில் ..ஆனால் இம்முறை வேற மாதிரியான ஆண் , பெண் முகங்கள் ..இம்முறை பெரிய அளவில் ...
இன்று வரை முகங்கள் தோன்றி கொண்டுதான் இருகின்றன ... அரசாங்கமும் கண்டு பிடித்து கொண்டே தான் இருக்கிறது ...ஆனால் ஒருவருக்கும் விளங்கவில்லை ...அல்லது தெரியவில்லை இது அமானுஷ்யத்தின் முகம் என்று.....

மீண்டும் சந்திப்போம் ....

அன்புடன்
ஹரி.